அம்பேத்கரை அவமதித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவே உடனடியாக பதவி விலகு என இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம். !
திருப்பத்தூர்

டாக்டர் அம்பேத்கரை அவமதித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவே உடனடியாக பதவி விலகு என பாரத ஸ்டேட் வங்கி எதிரில் இந்திய குடியரசு கட்சினர் கண்டன கோஷம்.!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி பாரத ஸ்டேட் வங்கி எதிரில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களை அவமரியாதையாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில பொதுச்செயலாளர் ஏலகிரி கோபிநாதன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும், டாக்டர் அம்பேத்கரை அவமரியாதையாக பேசியதை கேட்டு கொண்டு சும்மா இருக்கும் பிரதமர் மோடி உடனடியாக அமித்ஷாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. அனைவருக்கும் சம உரிமை பெற காரணமான இருந்த டாக்டர் அம்பேத்கரை அவமரியாதை செய்ததை கண்டிக்கிறோம்.
தாழ்த்தப்பட்ட மக்களை தலை நிமிர செய்தவர் தான் அம்பேத்கர்.
இதில் மாவட்ட செயலாளர் சின்னகாளி மற்றும் இந்திய குடியரசு கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை தலைவர் ராஜா நன்றி கூறினார்.
ந.வெங்கடேசன்