திருப்பத்தூரில் நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த அமைச்சர் எ.வ.வேலு.!

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த அமைச்சர் எ.வ.வேலு.!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக பதிய பேருந்து நிலையம் எதிரில் 
நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஐயப்பன்  ஏற்பாட்டில் ‌ நெடுஞ்சாலை துறை அமைச்சர் எவ.வேலு நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மேலும் பொது மக்களுக்கு வாழைப்பழம்,பப்பாளி, தர்பூசணி, தயிர், மோர், இளநீர்,ஜூஸ் மற்றும் பல வகைகள் வழங்கினர்.

மேலும் இந்த நிகழ்வில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன், மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

ந.வெங்கடேசன்