வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்

திருப்பத்தூர்

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில்  மாவட்ட தலைவர் பிரேம்குமார் தலைமையில் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், உதவி செயற்பொறியாளர் நிலை பதவி உயர்வினை காலதாமதமின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அருள் மொழி வர்மன், ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட செயலாளர் விஜயகுமார் மாவட்ட துணை செயலாளர் பாண்டியன் மற்றும் இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர். இறுதியாக சிவராமன் நன்றி கூறினார்.  மற்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் திருப்பத்தூர் நகர போலிசார் கைது செய்து ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ந.வெங்கடேசன்