ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கத்தை திரும்பப் பெறப் போவதில்லை.! தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் தகவல் .!

தமிழகம்

ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கத்தை திரும்பப் பெறப் போவதில்லை.! தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் தகவல் .!

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார்.இந்த பிரச்சினையில் ஏடிஜிபி யின் வாகனம் பயன்படுத்தப்பட்டதாலும், பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்களிடம் செல்போனில் பேசியதாகவும் கூறி கைது செய்யப்பட்டு காவல் துறை கட்டுப்பாட்டில் வைக்ககப்பட்டார்.

பின்பு கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எச்.எம்.ஜெயராம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வில் நேற்று (ஜூன்.18) விசாரணைக்கு வந்தது.

அப்போது எச்.எம்.ஜெயராம் தரப்பில், இந்த வழக்கில் தான் ஒரு எதிர்மனுதாரராக இல்லாத நிலையில் தனக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தனக்கு சம்மந்தம் இல்லை என வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள், இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு கூறினார். மேலும், மூத்த காவல் அதிகாரி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாகவும், அவரது இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், ஏடிஜிபி ஜெயராமின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்வது தொடர்பாக உரிய விளக்கத்தை கேட்டு தெரிவிப்பதாக கூறினார். உடனடியாக நீதிபதிகள், பணியிட நீக்கத்தை ரத்து செய்வது தொடர்பாக உரிய விளக்கத்தை கேட்டு நாளைய தினமே (இன்று) உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க தமிழ்நாடு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடந்த விவாதம் பின்வருமாறு

நீதிபதிகள் :-

'இடைநீக்கம் தொடர்பா என்ன முடிவு எடுக்கப்பட்டது?'

தமிழ்நாடு அரசு :-

'தற்போதைய நிலையில் பணியிடை நீக்கத்தை திரும்ப பெற போவதில்லை.அது தொடரும் வழக்கு. விசாரணை நடைபெற்று வருவதால் பணியிடை நீக்கம் என்பது தொடர வேண்டும். கிரிமினல் வழக்கு நிலுவையில் இருக்கும் போது இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியாது. வழக்கில் இவருக்கு சம்மந்தம் இருப்பதாக கருதுவதால் தற்போதைய நிலையில் இடை நீக்த்தை ரத்து செய்ய முடியாது'

இடைநீக்கம் செய்த ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

நீதிபதிகள் 

இது தொடர்பான வழக்கை ஏதேனும் சிறப்பு விசாரணை பிரிவுக்கு மாற்ற முடியுமா? என்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் வேறு நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிடலாம் என இருக்கிறோம்

பின்னர் வழக்கு சற்று நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.