பண்பொழி திருமலை கோயிலில் ரூ 2.82 கோடியில் திருமண மண்டபம் .!

தென்காசி

பண்பொழி திருமலை கோயிலில் ரூ 2.82 கோடியில் திருமண மண்டபம் .!

பண்பொழி திருமலை கோயிலில் ரூ 2.82 கோடியில் திருமண மண்டபம்

காணொளி காட்சியில் முதல்வர் அடிக்கல் நாட்டினார்

தென்காசி ஜூன் 19

சென்னையில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்து சமய அறநிலை துறையின் சார்பில் பல்வேறு பணிகளுக்கு காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைகுமாரசாமி கோயிலில் ரூபாய் 2.82 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடை பெற்றது. பூமி பூஜையில் மாவட்ட ஆட்சியர் 
ஏ கே கமல் கிஷோர் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

இந் நிகழ்ச்சியில் பண்பொழி திருமலைகுமாரசாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருணாசலம் செட்டியார், துணை ஆணையர் கோமதி, பண்பொழி பேரூராட்சி மன்ற தலைவர் ராஜராஜன், செயல் அலுவலர் விமலா ஸ்டெல்லா பாய், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், ஆலங்குளம் செல்வராஜ், அரசு ஒப்பந்ததாரர் சேது, மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்