தென்காசியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி 55 வது பிறந்தநாள் நிகழ்ச்சி .!

தென்காசி

தென்காசியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி 55 வது பிறந்தநாள் நிகழ்ச்சி .!

தென்காசியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி 55 வது பிறந்தநாள் நிகழ்ச்சி

பழனி நாடார் எம்எல்ஏ பங்கேற்பு

தென்காசி ஜுன் 19

தென்காசியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி எம் பி யின் 55 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான எஸ். பழனி நாடார் தலைமை வகித்தார்.

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வடக்குரத வீதியில் அமைந்துள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கேக் வெட்டப்பட்டது. அதன் பின்னர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், முன்னாள் யூனியன் சேர்மன் சட்டநாதன், ஜேம்ஸ், சங்கை கணேசன், மாவட்ட துணைத் தலைவர் சண்முகவேல், மாவட்ட பொதுச் செயலாளர்கள், ஏஜிஎம் கணேசன், சந்தோஷ், கோவிந்த பேரி ஊராட்சி தலைவர்
டி கே பாண்டியன், வட்டார தலைவர்கள் பெருமாள்,கதிரவன்,மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஹலால் சலீம், தாயார்தோப்பு ராமர், பேச்சாளர் ஆயக்குடி பெரியசாமி, கவுன்சிலர் ரபீக், ஈஸ்வரன், நரிசேட், ராகுல் காந்தி, சுப்பிரமணியன், மகளிர் காங்கிரஸ் பூமாதேவி, சேர்மக்கனி,  இளைஞர் காங்கிரஸ் பிரேம்குமார், அசன் இப்ராஹிம், முப்புடாதி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்