அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக் கோயிலில் ரூ.282 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபம். !

தென்காசி

அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக் கோயிலில் ரூ.282 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபம். !

தமிழ்நாடு முதலமைச்சர்  சென்னை  தலைமைச் செயலகத்திலிருந்து இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் பல்வேறு பணிகளுக்கு  காணொளி காட்சி வாயிலாக அடிக்கல்  நாட்டினார்.

இதனை தொடர்ந்து இன்று தென்காசி மாவட்டம் பண்பொழி, அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக் கோயிலில் ரூ.282 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜையில் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் அருணாசலம் செட்டியார் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்