குற்றாலநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான 22.09 ஏக்கர் நிலங்கள் இந்து சமய அறநிலையத்துறை மூலம் மீட்பு .!
தென்காசி

கல்லூரணியில் குற்றாலநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான 22.09 ஏக்கர் நிலங்கள் அறநிலையத்துறை மூலம் மீட்பு
தென்காசி ஜூன் 10
தென்காசி மாவட்டம் கல்லூரணியில் குற்றாலநாத சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 22.09 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப் பாளர்களிடமிருந்து நேற்று இந்து சமய அறநிலைத்துறை மூலம் மீட்கப்பட்டது.
பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணியில் குற்றாலம் திருக் குற்றாலநாத சுவாமி திருக்கோயில் கால சந்தி கட்டளைக்கு பாத்தியப்பட்ட புல எண்.339-ல் ஏக்கர் 2.21, புல எண்.355-ல் ஏக்கர் 4.29, புல எண்.379/1-ல் ஏக்கர் 1.26, புல எண்.379/2-ல் ஏக்கர் 0.69, புல எண்.380-ல் ஏக்கர் 3.96, புல எண்.383/1-ல் ஏக்கர் 0.62, புல எண்.385-ல் ஏக்கர் 0.43, புல எண்.387-ல் ஏக்கர் 8.63 393ல் 2.21 ஏக்கர் மொத்தம் 22 ஏக்கர் 09 சென்ட் பரப்பளவு கொண்ட புன்செய் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மேற்படி திருக்கோயில் உதவி ஆணையர்/ செயல் அலுவலர் ஆறுமுகம், முன்னிலையில் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சக்தி முருகேசன் தென்காசி, இந்து சமய அறநிலையத் துறை நில அளவையர்கள் மற்றும் திருக் கோயில் பணியாளர்கள் ஆகியோர்கள் மூலம் மேற்படி புன்செய் நிலங்கள் திருக் கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது.
செய்தியாளர்
AGM கணேசன்
விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு