திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசனின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம் .!
தென்காசி

குத்துக்கல் வலசையில் திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசனின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம்
திமுக மாவட்ட பொறுப்பாளர்,
தொகுதி மேற்பார்வையாளர் பங்கேற்பு
தென்காசி ஜூன் 18
தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், திமுக முன்னாள் மாவட்ட பிரதிநிதியும், தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏ ஆர் எம் அழகு சுந்தரத்தின் தகப்பனார் முருகேசனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று நடை பெற்றது.குத்துக்கல்வலசை பேருந்து நிறுத்தம் அருகில் அலங்கரிக்கப்பட்ட அன்னாரது புகைப்படத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை வகித்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி பைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் கலை கதிரவன், தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ ஆர் எம் அழகு சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்
நிகழ்ச்சியில் மேலகரம் பேரூர் செயலாளர் சுடலை, மாவட்ட துணைச் செயலாளர் கென்னடி குத்துக்கல்வலசை கே வி கே துரை,ஒன்றிய துணை செயலாளர் அருணாசலம் குற்றாலம் அறங்காவலர் சுந்தர்ராஜ் முருகேசன், சிவன் பாண்டியன்,தங்க சிவன், குத்தாலிங்கம், முத்தையா, சேர்மராஜ், வேதம் புதூர் செல்லப்பா, கருப்பசாமி, வழக்கறிஞர் அணி குட்டி காளிராஜ் செல்வகுமார் சுரேஷ் ஐடிஐ ஆனந்த், கணேசன் பால்பாண்டி தவசிமுத்து மாரிச்சாமி வாசு சங்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்