சென்னையில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரிடம் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கோரிக்கை மனு .!
தென்காசி

சென்னையில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரிடம் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கோரிக்கை மனு
தென்காசி ஜூன் 21
சென்னையில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவ சங்கரிடம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் கோரிக்கை மனுவினை அளித்தார்.
அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது, தென்காசி புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு தனியாக மின்வாரிய மேற்பார்வை அலுவலகம் புதிதாக உருவாக்கப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் தனித்தனியாக மின் பகிர்மான வட்டம் அதாவது கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, ஆலங்குளம்
என ஆறு செயற் பொறியாளர் அலுவலகம் அதாவது மின் பகிர்மான கோட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
தென்காசிக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் 55 கிலோமீட்டர் தூரம் இடைவெளி இருக்கிறது. இந்த பகுதியில் இருக்கிற மின் நுகர்வோர் மற்றும் மின்சார வாரிய அலுவலர்கள் ஊழியர்கள் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று வருவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தனியாக மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் தென்காசிக்கு வேண்டும் என்ற கோரிக்கை வழங்கப் பட்டு அது பரிசீலனை செய்யப்பட்டு ஆய்வுகள் நடத்தப் பட்டு கோப்பு தலைமை மின்சார வாரிய அலுவலகத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
எனவே அமைச்சர் தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் தென்காசி கடையநல்லூர் சங்கரன்கோவில் ஆகிய மின் பகிர்மான கோட்டம் என 4 கோட்டம் அமைந்துள்ளதை கணக்கில் கொண்டும் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டும் தனியாக மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அமைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் மின்சார வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
நிகழ்வின் போது மாவட்ட அவை தலைவர் சுந்தர மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, கடையநல்லூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் காசி தர்மம் துரை, மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த மனுவினை மின்சார வாரிய தலைவர், மற்றும் வேளாண்மை இயக்குனர் தலைமை இடத்து தலைமை பொறியாளர் ஆகியோரிடமும் வழங்கினார்.
செய்தியாளர்
AGM கணேசன்