கோடை கால விளையாட்டு சிறப்பு முகாம் நிறைவு நாள்.!

தென்காசி

கோடை கால விளையாட்டு சிறப்பு முகாம் நிறைவு நாள்.!

தென்காசி மாவட்டத்தில் கோடை கால விளையாட்டு சிறப்பு முகாம் நிறைவு நாள் விழாவில் மாணவ மாணவியருக்கு சான்றிதழ்களை DRO வழங்கினார்

தென்காசி மே 15

தென்காசி மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 21 நாட்கள் ஏப்ரல் 25 முதல் மே 15 முடிய இ சி ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தடகளம் கால்பந்து கூடைப்பந்து அட்யா பட்யா வாலிபால் பளு தூக்குதல் ஆகிய விளையாட்டுகளுக்கு கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது இப்பயிற்சி முகாமில் சுமார் 400 பேர் கலந்து கொண்டனர்.

பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நாள்தோறும் சத்தான சிற்றுண்டி வழங்கப்பட்டது.

இக்கோடைகால பயிற்சி முகாமில் நிறைவு நாளான இன்று மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

கோடைகால பயிற்சி வழங்கிய பயிற்றுநர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இவ்விழாவில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜேஷ், கூடைப்பந்து பயிற்றுனர் சுப்பையா, வாலிபால் பயிற்றுனர் கிருஷ்ணகுமார்,   சசிகுமார், பளு தூக்குதல் பயிற்றுனர் மணிகண்டன், சர்வதேச தடகள விளையாட்டு வீரரும் தடகள பயிற்றுநருமான நிகில், உடற்கல்வி ஆசிரியர்கள் கார்த்தி, இளங்கோ, ரகுமான் மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள், அலுவலகப் பணியாளர்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்