தென்காசியில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சலீம் தலைமையில் வாக்கு திருட்டு கண்டன துண்டு பிரசுரம் வழங்கல் .!
தென்காசி

தென்காசியில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சலீம் தலைமையில் வாக்கு திருட்டு கண்டன துண்டு பிரசுரம் வழங்கல்
தென்காசி செப் 22
தென்காசியில் காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் ஒன்றிய அரசின் வாக்குத் திருட்டையும் இதில் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக வாக்குத் திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து கண்டனத் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் முகம்மது சலிம் தலைமை வகித்து வீடு வீடாக சென்று அனைத்து பொதுமக்களிடம் துண்டு பிரசாரங்களை வழங்கி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் சர்தார், மாவட்ட துணை தலைவர்கள் ரஷீத் கான், ஜாகிர் உசேன், காஜாமுகைதீன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகைதின் பிச்சை, தென்காசி நகர தலைவர் ஜேக்கப் அருணோதயம், துணைத் தலைவர் காஜா மைதின் பொருளாளர் முகமது இஸ்மாயில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு
வீடு வீடாக துண்டு பிரசுரங்களை கொடுத்தனர்.
செய்தியாளர்
AGM கணேசன்