தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பயணிகளுக்கு பேருந்து நிழற்குடை திறப்பு.!
தென்காசி

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பயணிகளுக்கு பேருந்து நிழற்குடை திறப்பு
தென்காசி மே 01
தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழக கேரளா எல்லையான புளியரை அருகில் தெற்குமேடு பஞ்சாயத்தில் பாக்கியம் நகரில் பொதுமக்களுக்கு இலவச பயணிகள் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு செங்கோட்டை ஒன்றிய தலைவர் வழக்கறிஞர் பால்ராஜ் தலைமை வகித்தார்.
பாஜக தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி நிழற்குடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் முன்னாள் ஒன்றிய தலைவர்கள் மாரியப்பன், இராம்குமார், மாவட்ட இளைஞரணி விவேக், சங்கர், ஊர் நாட்டாமைகள் அய்யாதுரை முருகன் ,
8 வது பூத் கிளைத் தலைவர்
விஜயகுமார்,7வது பூத் கிளை தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றிய நிர்வாகிகள் கனித்துரை, சுப்பையா, கண்ணபிரான், குத்தாலிங்கம், ஹரிச்சந்தர்,சங்கரன், கண்ணன், செல்வகணபதி, மாடசாமி, சுரேஷ் முருகன் கனி பாண்டியன் ,சிவா, சுந்தரராஜ், கார்த்திகேயன் ,
பட்டமுத்து,செல்வம், திருமலை குமார், கண்ணன்,சுடலைமாடன்,
மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்