வீடு புகுந்து பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தவருக்கு 5 ஆண்டு சிறை..! 3 ஆயிரம் அபராதம் .!

தென்காசி

வீடு புகுந்து பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தவருக்கு 5 ஆண்டு சிறை..!  3 ஆயிரம் அபராதம் .!

தென்காசி - வீடு புகுந்து பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தவருக்கு

5 ஆண்டு சிறை - 3 ஆயிரம் அபராதம் 

தென்காசி, மே 01

தென்காசிமாவட்டம்,கடையநல்லூர் அருகே உள்ள கண்மணியாபுரம் பகுதியில் இளம் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த நபருக்கு தென்காசி நீதிமன்றம்  5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 3000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள கண்மணியாபுரம் பகுதியை சேர்ந்த அசோகமணி என்பவரது  மகள் கஸ்தூரி (வயது19) என்பவரை கம்பனேரி பகுதியை சேர்ந்த சுப்பையா பாண்டி என்பவரது மகன் மாரி என்ற மாரிச்சாமி என்ற குழந்தை (வயது 60) என்பவர் கடந்த 27.11.2014 ம் தேதி  வாதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து குளியலறைக்குள் சென்று  அவரது  கையைப் பிடித்து இழுத்து ஜாதியை குறிப்பிட்டு பேசி தகராறு செய்துள்ளார்.

இது பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர. இந்த வழக்கு தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் நடை பெற்று வந்தது. வழக்கை விசாரித்த  மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ராஜவேலு எதிரிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 3000 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக சிவகிரி மருதப்பன் ஆஜராகி வாதாடினார்.

செய்தியாளர்

AGM கணேசன்