தென்காசியில் உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி.!
தென்காசி

தென்காசியில் உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி
தென்காசி ஜூன் 4
பிட் இந்தியா இயக்கத்தின் கீழ் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மிதிவண்டி ஓட்டுதலை ஊக்குவிப்பதற்காக
சண்டேஸ் ஆன் சைக்கிள் நாடு தழுவிய நிகழ்வாக நடைபெற்று வருகிறது.
இவ்வாண்டு ஜூன் 3ஆம் தேதி உலக மிதிவண்டி தினம் கொண்டாடப்படும் அதே வேளையில் உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ கே கமல் கிஷோர் அறிவுறுத்தலின் படி தென்காசி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தென்காசியில் நடத்தப்பட்ட மிதிவண்டி விழிப்புணர்வு பேரணியில் தென்காசி சைக்கிளிங் அகாடமி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப் பேரணியை தென்காசி மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ் தலைமையில் தென்காசி சைக்கிளிங் அகாடமி செயலாளரும், தென்காசி அமச்சூர் ஆனழகன் சங்கத்தின் பொதுச் செயலாளருமாகிய குத்தாலிங்கம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.இந்தப் பேரணியில் பெருந்திரளான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
விளம்ப தொடர்புக்கு