தென்காசியில் பள்ளி பேருந்துகள் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.!

தென்காசி

தென்காசியில் பள்ளி பேருந்துகள் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.!

தென்காசியில் பள்ளி பேருந்துகள் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தென்காசி மே 3

தென்காசியில் பள்ளி பேருந்துகளின் 
தரம் குறித்து  மாவட்ட ஆட்சியர் --- கமல் கிஷோர் ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி வட்டார பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் பங்கேற்றனர்.
 தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்தான வருடாந்திர ஆய்வு இ.சி. ஈ அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து இன்று நடைபெற்றது.

இந்த ஆய்வில் பள்ளி பேருந்துகளில் வேக கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பெட்டிகள், இருக்கை வசதிகள் மற்றும்  பேருந்துகளின் தரம் குறித்தான ஆய்வுகள் நடைபெற்றது.
இந்த ஆய்வு பணிகளில் மாவட்ட ஆட்சியர் ஏ கே கமல் கிஷோர் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) செல்வி, போக்குவரத்து ஆய்வாளர்கள் பேருந்துகளில் பயணம் செய்து முழுமையாக ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

பள்ளி வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஒலிப் பான்களை அகற்றும் படியும் அறிவுறுத்தப் பட்டது. இந்த வருடாந்திர ஆய்வில் தென்காசி மாவட்டத்தில் தென்காசி, ஆலங்குளம்,  உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  463 பள்ளி பேருந்துகள் பங்கேற்றன.இந்
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் மாரியப்பன், மோட்டார் வாகன ஆய்வாளர் மணி பாரதி, ஆலங்குளம் மோட்டார் வாகன ஆய்வாளர் கனகவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்