அபிஷேக்கை விளையாட்டு மைதானத்தில் காலால் விளையாட்டாக எட்டி உதைத்த சுமன் கில்.! நெட்டிஷன்கள் கடுப்பில்.!

கிரிக்கெட்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மாவை எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எட்டி உதைத்த கில்:

அகமதாபாத்தில் நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இரு அணிகளின் தொடக்க வீரர்களும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். குஜராத் கேப்டன் கில் 38 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார், ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா 41 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். இருவரும் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் என்பதால் மைதானத்தில் ஒரு லேசான நகைச்சுவையான நிகழ்வு நடந்தது.

ஆட்டத்தின் 14வது ஓவரில் அபிஷேக் சர்மாவுக்கு அவுட் வழங்கப்படவில்லை இது குறித்து உடனடியாக டிஆர் எஸ் எடுக்கப்பட்டது, ஆனால் அம்பயர் கால் என முடிவு வந்ததால் கில் நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார், அப்போது சில நிமிடங்கள் கழித்து, அபிஷேக் கூட குறுக்கிட்டு, நடுவருடனான உரையாடலில் இருந்து கில்லை அமைதிப்படுத்த அனுப்பினார்.

அதன் பிறகு அபிஷேக் அப்போது SRH இன் பிசியோக்களிடமிருந்து சில சிகிச்சைகளைப் பெற்றுக்கொண்டிருந்தார், அப்போது. கில் சொந்த மாநில அணி வீரர் அபிஷேக்கை விளையாட்டாக உதைத்தார், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கில் மைதானத்தில் இல்லாத நிலையில், அடுத்த ஓவரிலேயே அபிஷேக் அவுட்டானது குறிப்பிடத்தக்கதாகும்.