மார்பக புற்றுநோய் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் 231 இருசக்கர வாகனங்களில் பொது மக்களின் கவனத்தை ஈர்த்து பேரணி.!
விளையாட்டு

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி நந்தனம் ஒய் எம் சி ஏ விளையாட்டு மைதானத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் 231 இருசக்கர வாகனங்களில் பொது மக்களின் கவனத்தை ஈர்த்து பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை அங்கீகரித்து திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிக்கு “ஆசியின் புக் ஆஃப் ரெகார்ட் விருது” தற்போது வழங்கியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரை மு.க.ஸ்டாலின் இன்று (23.12.2024) காலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதிமாறன், எம்.பி., மற்றும் மாநில துணைச் செயலாளர்கள் நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
நிகழ்வில் தி மு கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், கழக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளர்கள் வே.கௌதமன் நிவேதா ஜெசிகா, , கார்த்திக், சுரேஷ் மனோகரன், வாசிம் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.