அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெயருக்கேற்றவாரு பொய் சொல்லாமல் இருக்க வேண்டும் - தமிழிசை சௌந்தராஜன்.!
சென்னை

அன்பில் மகேஷ் பொய்யா மொழி தயவு செய்து பொய்யாமொழி என்ற பெயரை வைத்திருப்பவர் பொய் சொல்லாமல் உண்மையாக சிபிஎஸ்சியில் என்ன திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மக்களிடம் சொல்ல வேண்டும் தவறான கருத்தை பரப்ப வேண்டாம் என தமிழிசை செளந்தராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை திருவான்மியூரில் ஆயுஷ்மான் பாரத் தினத்தை முன்னிட்டு அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தென்சென்னை மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக தென்சென்னை சேவை ஊர்தியும் பிரதமரின் காப்பீடு திட்டம் வழங்கும் நிகழ்வில் பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு காப்பீடுகளை மக்களுக்கு வழங்கினார். இதில் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் குமார், திருவான்மியூர் மண்டல் தலைவர், பாஜக மாநில நிர்வாகி செல்லபாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன்:-
தமிழக அரசு மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தை மறைக்க பார்க்கிறார்கள் முதல்வரின் மருத்துவக் காப்பீடு தான் எல்லா இடங்களிலும் தெரிகிறதே தவிர பிரதமரின் இந்த காப்பீடு தெரிவதில்லை
தமிழ்நாட்டில் இன்று பரபரப்பாக பேசப்படுவது கல்வி ஐந்தாவது எட்டாவது பெயில் பண்ணிட போறாங்க அன்பில் பொய்யா மொழி அவர்கள் மாணவர்கள் ஏதோ மத்திய அரசின் சிபிஎஸ்சி பள்ளியில் ஐந்தாவது எட்டாவது மாணவர்களை ஃபெயில் பண்ணிட போறாங்க எல்லோரும் பள்ளியிலிருந்து டிராப் அவுட் ஆகபோறாங்க தவறான ஒரு கருத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தமிழகத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார் சிபிஎஸ்சி பாட திட்டத்தில் இன்னும் சொல்லப்போனால் மாணவர்களின் அழுத்தம் விடுவிக்கப்பட்டிருக்கிறது பரீட்சை வைப்பார்கள் பரீட்சையில் பெயில் ஆயிட்டானா இரண்டு மாதத்தில் நன்றாக சொல்லிக் கொடுத்து மறுபடியும் பரீட்சை வைப்பார்கள் அதில் எல்லா குழந்தைகளும் பாஸ் ஆயிடுவாங்க.
டீச்சர்ஸ் ரெண்டு மாசம் குழந்தைகளுக்கு என்னென்ன குறைபாடுகள் இருக்கிறது என கண்டுபிடித்து படிக்க வைத்து பாஸ் பண்ண வைப்பாங்க.
இந்த முயற்சி இல்லாமல் பாஸ் பண்ணிக்கிட்டே போனா குழந்தை ஒன்பதாவது எப்படி பாஸ் பண்ணும் பத்தாவது எப்படி பாஸ் பண்ணும் கொஞ்சம் கூட ஒரு ஆலோசனையே இல்லாம ஏதோ மத்திய அரசு குழந்தைகளை பள்ளியில் டிராப் பண்ணுவது போல் பேசிக் கொண்டிருக்கிறார் வன்மையாக நான் கண்டிக்கிறேன்
தமிழக கல்வி அமைச்சர் முதலில் எல்லாவற்றையும் தெரிந்துவிட்டு பேச வேண்டும்.
இரண்டு மாசம் கொடுக்கிறார்கள் என ஏன் சொல்லவில்லை ஆசிரியர்கள் அந்த குழந்தைகளுக்கு தனி கவனம் செலுத்தி அவர்களை இன்னும் தகுதி உள்ளவர்களாக மாற்றி அதற்கு மேல் படிப்பு படிக்க அனுப்புவது சரியா
உங்களுக்கு வட இந்திய தொலைக்காட்சிகளில் எல்லா பெற்றோர்களும் வரவேற்று இருக்கிறார்கள்
சிபிஎஸ்சியில் படிக்கும் குழந்தைகளின் அழுத்தம் குறைக்கப்பட்டுள்ளது
அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்றால் தமிழ்நாட்டு பாடநூலில் படிக்கும் குழந்தைகளுக்கு தான்
தமிழ்நாட்டில் 35 மார்க் வாங்கினால் பாஸ், சிபிஎஸ்சி 30 மார்க் வாங்கினால் பாஸ் ஆக இதையெல்லாம் சொல்லாமல் இது மத்திய அரசு 5, மற்றும் 8, குழந்தைகள் பெயிலாக்க போறாங்க என்று தவறான தகவலை சொல்கிறார் பெற்றோர்களை தூண்டி விடுகிறார்
பெற்றோர்கள் யாரும் இந்த தூண்டுதலுக்கு ஆளாக மாட்டார்கள் நான் குழந்தைகள் நல்லா படிச்சு இன்னும் தகுதியானவர்களாக மாறி அடுத்த கிளாசுக்கு போகணும்னு தான் நினைப்பாங்க அதனால் குழந்தைகளை மேம்படுத்துவதற்காக கொடுக்கின்ற திட்டத்தை தயவு செய்து அன்பில் பொய்யாமொழி அவர்கள் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
குழந்தைகள் எல்லாம் நல்லா படிக்கணும் உலக அளவில் டாக்டர்கள் பிரபலமாக இருக்கிறார்கள் என்றால் என்ன காரணம் நம்ம தேர்வு முறை நாம அழகா தேர்வு வைத்து அவர்களை பாஸ் செய்றோம் உலகத்தில் மற்ற நாடுகள் எளிதாக பாஸ் பண்ணி விட்டுறாங்க, அதனால் அவர்கள் திறமை அற்றவர்களாக இருக்கிறார்கள்
அன்பில் பொய்யா மொழி அவர்கள் தயவுசெய்து பொய்யாமொழி என்ற பெயரை வைத்திருப்பவர் பொய் சொல்லாமல் உண்மையாக சிபிஎஸ்இ யில் என்ன திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மக்களிடம் சொல்ல வேண்டும் மக்களிடம் தவறான கருத்தை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
திருமாவளவன் அவர்களே தயவு செய்து குழந்தைகளை படிக்க விடுங்கள் திருப்பி அடிங்க என நீங்கள் சொல்லிக் கொடுக்கிறீர்கள் நாங்கள் படி என்று சொல்லிக் கொடுக்கிறோம்.
புதிய கல்விக் கொள்கை என்பது குழந்தைகளை மன அழுத்தத்தை குறைத்து சிபிஎஸ்சி 15 சதவீதம் சிலபஸ் குறைச்சாச்சு,
நான் கேட்கிறேன் உங்களுக்கு இருக்கக்கூடிய அக்கறை பிரதமருக்கு இருக்காதா பிரதமர் நம் நாட்டு குழந்தைகள் நல்ல வரணும் என நினைப்பார்
பிரதமர் எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி படிக்க வேண்டும் என நினைக்கிறார் இது தப்பா தயவு செய்து தமிழ்நாட்டில் முதலில் பொய் பிரச்சாரத்தை தமிழக கல்வித்துறை அமைச்சரும் திருமாவளவன் போன்றவர்களும் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
செய்தியாளர்
S S K