வேளச்சேரியில் சட்டவிரோத மது விற்பனை கண்டுகொள்ளாத கலால் போலீசார்.!

வேளச்சேரி

வேளச்சேரியில் சட்டவிரோத மது விற்பனை கண்டுகொள்ளாத கலால் போலீசார். 

சென்னை வேளச்சேரி சென்னை சில்க்ஸ் பின்புறம் ரோலக்ஸ் பார் செயல்பட்டு வருகிறது, 

இங்கு அரசு நிர்ணயித்த நேரத்தை கடந்து இரவு 10 மணிக்கு மேல் சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் மதுவிற்பனை தங்கு தடையின்றி நடந்து வருகிறது. 

சட்டவிரோத மதுவிற்பனையை தடுக்க வேண்டிய அடையார் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தக்க சன்மானம் பெற்றுக் கொண்டு, கண்டும் காணாமல் இருக்கின்றனர். 
காவல்துறை உயர் அதிகாரிகள் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

மேலும் புதிய மதுபானக் கொள்கையின் படி சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடும் மதுபான பார்களின் உரிமத்தை ரத்து செய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

செய்தியாளர்

     S S K