பள்ளிகரணையில் சாலை தடுப்பில் மோதி லாரி முழுவதும் சேதம்.!
சென்னை

பள்ளிகரணையில் சாலை தடுப்பில் மோதி லாரி முழுவதும் சேதம் லாரியின் சக்கரம் தனியாக கழண்டு ஓடியது. இரவு நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்ப்பு.
சென்னை பள்ளிகரணை காமாட்சி சந்திப்பு அருகே மேம்பாலம் ஏறும் இடத்திற்கும், அணுகு சாலைக்கும் நடுவே சாலை தடுப்புச் சுவர் உள்ளது.
இந்த தடுப்புச் சுவர் சமீபத்தில் நீளமான முன்னோக்கி கட்டப்பட்டது.
இது குறித்த முழுமையான தகவல்களை போக்குவரத்து போலீசாரும், நெடுஞ்சாலைத் துறையும் ஏற்படுத்தவில்லை.
அதனால் வாகனங்கள் வேகமாக வரும் போது தடுப்பு இருப்பது தெரியாமல் அதில் இடித்து விட்டு செல்கிறார்கள்.
இந்நிலையில் அதிகாலை தரமணியில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற டாரஸ் லாரி ஒன்று அதிவேகமாக வந்துள்ளது, இதன் காரணமாக சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் முன்சக்கரம் முழுவதும் கழண்டு ஓடிவிட்டது, லாரியின் ஒரு பகுதி முழுவதும் சேதமானது. ஓட்டுநர் அன்பு அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பின்னர் காவல்துறையினர் வராமலேயே லாரியை லாரி உரிமையாளரின் ஆட்கள் கிரேன் மூலம் அப்புறபடுத்தினர்.
தகவலறிந்து வந்த பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் லாரியை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என் விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர்
S.S.K