கோவை வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி.!

மேட்டுப்பாளையம்

கோவை வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி.!

கோவை வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் சிறுமுகை ரோடு ஹெச் எம் ஒ ஆடிட்டோரியத்தில் மாவட்ட தலைவர் மு. அப்துல் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

மமக மாவட்ட செயலாளர் ஆர்.முஹம்மது அப்பாஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் . தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் நாசர் , மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி மற்றும் மாவட்டத் துணை நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் தமுமுக தலைமை கழக பேச்சாளர் கோவை ரெக்ஸ் ரபி சிறப்புரை நிகழ்த்தினார்.

திமுக பா. அருண்குமார் Ex.MLA ,மாநில விவசாயிகள் அணி து.அமைப்பாளர் , டி ஆர் எஸ் சண்முகசுந்தரம் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் , அ. அஷ்ரப் அலி திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் , ஆர்.எஸ்.நவீன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் , எஸ்.எம்.டி கல்யாணசுந்திரம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர், சுரேந்திரன் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர், முனுசாமி திமுக தெற்கு நகர செயலாளர், திமுக காரமடை நகர செயலாளர் வெங்கடேஷ் , தங்கமணி காங்கிரஸ் நகர தலைவர் , எல்.ஐ.சி. இக்பால் மதிமுக நகர செயலாளர் , தொல்குடி மைந்தன் வி.சி.க. மாவட்ட செயலாளர் , சிபிஐ நகர துணை செயலாளர் மன்சூர் , கிழங்கு மண்டி உரிமையாளர் சங்க செயலாளர் எஸ்.வி மணி , காரமடை நகராட்சி நகர்மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ் ,  மேட்டுப்பாளையம் நகராட்சி நகர்மன்றத் துணைத் தலைவர் அருள் வடிவு முனுசாமி , நகர்மன்ற உறுப்பினர்கள் LS புரம் ரவி திமுக , ஶ்ரீ ராம் திமுக , அனிஷா பாபு திமுக , ஸமினா பேகம் மமக , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி புவனேஸ்வரி மற்றும் தமுமுக மமக நகர தலைவர் முகமது அனிபா , தமுமுக நகர செயலாளர் ஜாபர் சாதிக் , மமக நகர செயலாளர் முஹம்மது ஜுபைர் , நகர பொருளாளர் முகமது ரஃபி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமுமுக மமக நிர்வாகிகள் , உறுப்பினர்கள் ,  ஜமாத்தார்கள் , உலமா பெருமக்கள் , தோழமைக் கட்சி நிர்வாகிகள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . 

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi (MR)