மனிதநேய மக்கள் கட்சி மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் .!
கோவை

மனிதநேய மக்கள் கட்சி மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் .!
மனிதநேயமக்கள் கட்சி ஜூலை 6 மதுரை மண்டல மாநாட்டிற்கு கோவை மத்திய மாவட்டம் சார்பாக 21-06-2025 மாலை 5:00 மணியளவில் வசந்தம் மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளரும் ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல்_சமது எம் எல் ஏ மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் உமர் ஹாஜியார் மற்றும் தமுமுக மாநில செயலாளர் கோவை சாகுல் ஹமீது மற்றும் தலைமைப் பிரதிநிதிகள் சாதிக் அலி, அனல் அக்பர் ,A.K.சுல்தான் அமீர், தொண்டரணி பவானி முஹம்மது,SMI அம்ஜத் கான் மற்றும்,8 மாவட்ட நிர்வாகிகள்,அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்திறகு கோவை வடக்கு மாவட்ட தலைவர் மு.அப்துல் ஹக்கீம் , மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி, மாவட்ட அணி நிர்வாகிகள் சாதிக்,முஹம்மதுரஃபி, சதக்கத்துல்லா,பாசில் ஆகியோர் கலந்து கொண்டனர். வருகின்ற ஜூலை 6 மதுரையில் நடைபெறுகின்ற மாநாட்டிற்கான பணிகள் நடைபெறுகின்றது அதற்கான திட்டமிடல் எவ்வாறு செயல்படுத்துவது என விவாதிக்கப்பட்டது.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )