புறக்காவல் சாவடிகளை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர். !

கருமத்தம்பட்டி

புறக்காவல் சாவடிகளை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர். !

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K. கார்த்திகேயன் இ.கா.ப. கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நால்ரோடு பகுதியிலும், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணிபுதூர் பகுதியிலும் புறக்காவல் சாவடியை (Police Outpost) துவக்கி வைத்தார்.

கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதி மற்றும் சூலூர் சிந்தாமணிபுதூர் சந்திப்புகளில் நடக்கக்கூடிய குற்றங்களை தடுப்பதற்காகவும், போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்காகவும் மற்றும் சாலையில் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்காகவும் புறக்காவல் சாவடி (Police Outpost) அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

இவ்விழாவில் கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் தங்கராமன், சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை, கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் சண்முகவேல், கருமத்தம்பட்டி உதவி ஆய்வாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், குற்ற செயல்கள் நடைபெறா வண்ணம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்து உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.