திமுக - வின் நான்காண்டு கால ஆட்சியை போற்றும் வகையில் கோவையில் நன்றி தெரிவிப்புக் கூட்டம்.!
கோவை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 4 zஆண்டு கால சிறந்த ஆட்சிக்கு நன்றி கூறும் வகையிலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரின் நல் வாழ்த்துக்களுடனும் கோவை மாநகர் மாவட்ட பீளமேடு பகுதி 1 சார்பில் திராவிட முன்னேற்ற கழகத் தலைவரின் “நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு” திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார் கலை,இலக்கிய,பகுத்தறிவு பேரவை மாநில. துணை செயலாளர் மீனா ஜெயக்குமார்.
இக்கூட்டத்தில் மாநகர மாவட்ட செயலாளர் கார்த்திக் மற்றும் தலைமை கழக பேச்சாளர் அந்தியூர் சுப்பு ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
பொதுக் கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த பகுதி கழகச் செயலாளர் தம்பி துரை, செந்தமிழ்ச் செல்வன் ஆகியோருக்கு தனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் மீனா ஜெயக்குமார்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )
செய்திகள் & விளம்பர தொடர்புக்கு
97 87 416 486
.