தென்காசியில் மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டம்.!
தென்காசி

தென்காசியில் மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டம்
தென்காசி மே 10
மனிதநேய மக்கள் கட்சியின் தென் மண்டல மாநாடு குறித்த தென்காசி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் தென்காசி ஆபாத் பள்ளிவாசல் இப்தார் ஹாலில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் நயினார் முகமது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சலீம், அப்துல் ரகுமான், பொருளாளர் முகமது பாசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுச் செயலாளர் அப்துல் சமத் எம் எல் ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச் செயலாளர் மைதீன் சேட்கான் சலிமுல்லா கான் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
மாநில செயற்குழு உறுப்பினர்கள் முகமது பிலால் பஷீர் ஒலி முகமது அலி பீர் மைதீன் அகமதுஷா பண்பொழி அலி தலைமை கழக பேச்சாளர் கொலம்பஸ் மீரான் தொண்டரணி மாநில துணைச் செயலாளர் அப்துல் மஜீத் சையது மசூது முகமது சித்திக் மற்றும் கிளை தலைவர்கள் செய்யல் அலி பாதுஷா ஆரிப் முகமது அலி ரஜாய் மைதீன் உசேன் மரைக்காயர் மாவட்ட அணி நிர்வாகிகள் அப்துல் முத்தலிப் ஹமீது மஜீத் ஜாபர் ஹுசைன் கனி நவாஸ் செய்யதலி பாதுஷா பீர் முகமது முத்தலிப் ஷெரீப் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் தென்காசி மாவட்டத்திற்கு தேவையான அனைத்து அரசு கட்டமைப்புகளையும் குறிப்பாக பாஸ்போர்ட் அலுவலகத்தினை அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும் குற்றாலத்தை உலகதரம் வாய்ந்த சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நகரத் தலைவர் அபாபில் மைதீன் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்