அணைகளின் மதகுகளை திறந்து விட்ட இந்தியா. ! வெள்ளத்தில் பாகிஸ்தான். !

இந்தியா - பாகிஸ்தான்

அணைகளின் மதகுகளை திறந்து விட்ட இந்தியா. ! வெள்ளத்தில் பாகிஸ்தான். !

கடந்த வியாழன் முதல் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் துவங்கியுள்ள நிலையில் அணைகளின் மதகுகளை இந்தியா திறந்து விட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானின் சில பகுதிகள் வெள்ளத்தில் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வியாழக்கிழமை இரவு முதல் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது. பாகிஸ்தானில் தொடர்ந்து குண்டுவீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தானை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் நோக்கில், மத்திய அரசு இரண்டு அணைகளின் மதகுகளைத் திறந்துள்ளது.

அணைகளை திறந்த இந்தியா

பாகிஸ்தானை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் நோக்கில், வியாழக்கிழமை ராம்பனில் உள்ள பாக்லிஹார் நீர் மின் திட்டம் மற்றும் சலால் அணையின் மூன்று மதகுகளை இந்தியா திறந்துவிட்டுள்ளது. பெஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல் உறவுகள் மோசமடைந்துள்ளன. பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் புதன்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது.

சலால் அணையின் இரண்டு மதகுகள் திறப்பு

கனமழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், போர்ச் சூழலிலும் சந்திரபாகா அணையின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. ராம்பனில் உள்ள சலால் அணையின் இரண்டு மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன. இரண்டு வாரங்களுக்குப் பிறகு மதகுகள் திறக்கப்பட்டதால், வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பாகிஸ்தானின் சியால்கோட் நகரம் எந்த நேரத்திலும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முப்படை தலைவர்களின் உயர்மட்ட கூட்டம்

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (மே 9) பாதுகாப்புப் படைத் தலைவர் மற்றும் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர்களுடன் உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். தற்போதைய பாதுகாப்பு நிலைமையை மதிப்பிடுவதற்கும் எதிர்கால உத்திகளை வகுப்பதற்கும் இந்த அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தியா - பாகிஸ்தான் தொடரும் பதற்றம்

இந்திய நிர்வாகத்தில் உள்ள ஜம்மு காஷ்மீரில் உள்ள பெஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பஹல்காம் படுகொலைக்குப் பழிவாங்கும் விதமாக, இந்திய ஆயுதப்படைகள் மே 7 ஆம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் கீழ் ஜெய்ஷ்-இ-முகமதுவின் பல தீவிரவாதத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.