வாகன விபத்தில் மூளைச் சாவு அடைந்து உறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை.!
தென்காசி

வாகன விபத்தில் மூளைச் சாவு அடைந்து உறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம், கரிவலம் வந்தநல்லூர் குறுவட்டம் பருவக்குடி கிராமம் வடக்குத் தெரு என்ற முகவரியில் வசித்து வரும் செல்வன் ராஜா த பெ.பெரிய மாடசாமி (வயது 29) என்பவர் 14.04.2025 அன்று வேலை நிமித்தமாக இராஜபாளையம் சென்றிருந்த போது வாகன விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்ததால் மேற்படி நபரை மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டு சிகிச்சை பலனின்றி (15.04.2025 ) மூளைச் சாவு அடைந்ததால் காலஞ்சென்ற நபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி நபரின் உடல் (16.04.2025 ) மாலை சுமார் 7.00 மணிக்கு அவரது சொந்த ஊரான பருவக் குடி கிராமத்தில் வைத்து இறுதிச் சடங்குகள் செய்வதற்கு கொண்டு வரப்பெற்ற நிலையில் சங்கரன்கோவில் கோட்டாட்சித் தலைவர் மற்றும் வட்டாட்சியர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அரசு சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர்
AGM கணேசன்