எஸ்டிபிஐ கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க விழா .!
தென்காசி

எஸ்டிபிஐ கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க விழா
மாநில பொதுச் செயலாளர் பங்கேற்பு
தென்காசி ஜூன் 21
எஸ்டிபிஐ கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடுப்பேட்டை இஃப்தார் ஹாலில் வைத்து நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஷேக் மைதீன் தலைமை வகித்தார்.
நகர துணைத்தலைவர் பாதுஷா, நகர துணைச்செயலாளர் ஜாஹிர் ஹுசைன், நகர பொருளாளர் அஹமது கபீர், நகர மருத்துவ சேவை அணி பொறுப்பாளர் ஷாகுல் ஹமீது, நகர தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் அப்துல் அமீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாபர் அலி உஸ்மானி, மாவட்ட தலைவர் திவான் ஒலி, மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது மஹ்மூத், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் ஷேக் முஹம்மது ஒலி, தொகுதி தலைவர் பீர்முகம்மது நகர்மன்ற உறுப்பினர்கள் மைதீன் ராசப்பா, நாகூர் மீரான், மருத்துவர் ஜாபர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் கலந்துகொண்டு கட்சி கோடியேற்றி, மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதில் பத்தாம்வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. நகர தலைவர் செய்யது அலி பாதுஷா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 100 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
செய்தியாளர்
AGM கணேசன்