சிவ நாடானூரில் புதிய சமுதாய நல கூடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா .!
தென்காசி

சிவ நாடானூரில் புதிய சமுதாய நல கூடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
பழனி நாடார் எம் எல் ஏ, ஜெயபாலன் பங்கேற்பு
தென்காசி ஜூன் 21
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் சிவ நாடானூர் ஊராட்சியில் ஒன்றிய நிதியிலிருந்து 26 லட்சம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து ரூபாய் பத்து லட்சம் என ரூபாய் 36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சமுதாய நலக் கூடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை தலைமை வகித்தார். தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான எஸ்.பழனி நாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர், இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, ரமேஷ், பொன் செல்வன், மாவட்ட கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், சாக்ரடீஸ், ஊராட்சி தலைவர் முத்துசாமி, வட்டார காங்கிரஸ் தலைவர் குமார் பாண்டியன், முருகேசன், ராஜேந்திரன், தங்கப்பழம் செல்வன், உதயசூரியன் சமுத்திர பாண்டியன் மகாராஜா அய்யாதுரை அழகன் முருகன் அருள் காளி பாண்டியன், அண்ணாதுரை கோபு ஆசிரியர் அரசு ஒப்பந்ததாரர் விஜயன்மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளரும் ராமநாதபுரம் கிளை செயலாளருமாகிய மாரியப்பன்
தென்காசி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொது மக்கள்பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்