சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது.!
தென்காசி

கீழப்பாவூரில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
தென்காசி மே 12
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்பாவூர் பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான காவல்துறையினர் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கீழப்பாவூர் ரைஸ் மில் தெருவை சேர்ந்த சமுத்திர பாண்டி என்பவரின் மகன் தங்கசாமி 45 என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 மது பாட்டில்கள் மற்றும் விற்ற பணம் ரூபாய் 200 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.