சென்னையில் வனத்துறை அமைச்சரிடம்  திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கோரிக்கை மனு.!

தென்காசி

சென்னையில் வனத்துறை அமைச்சரிடம்  திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கோரிக்கை மனு.!

சென்னையில் வனத்துறை அமைச்சரிடம்  திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கோரிக்கை மனு

தென்காசி ஜூன் 14

சென்னையில் வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம், தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன் கோரிக்கை மனுவினை அளித்தார். அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது,

தென்காசி சட்டமன்றத் தொகுதி ஆயிரப்பேரி ஊராட்சி கட்டுப்பாட்டில் இருந்து வந்த பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பழைய குற்றாலம் அருவியை மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள வனத் துறைக்கு எடுக்கும் விதமாக இது எக்கோ சோன் பகுதிக்குள் வருகிறது என்று சொல்லி ஆறு மணிக்கு மேல் பொதுமக்கள் அருவிக்கு வரக்கூடாது என்று அறிவிக்கப்படாத சட்டத்தை வனத் துறையினர் கூறி பொதுமக்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் குளித்துவிட்டு செல்ல வேண்டும் என்றும் சுமார் 2 கிலோ மீட்டருக்கு வெளியே ஆட்டோ கார் போன்ற வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி வந்தனர்.

இது சம்பந்தமாக அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடைபெற்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனுவும் வழங்கினர்.

இதற்கிடையில் நானும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்,  வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆகியோர்களை சந்தித்து பழைய குற்றாலம் அருவி சம்பந்தமாக பேசி பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் சுற்றுலா பயணிகளுக்காகவும் சுமார் 18 குளங்கள் பாசன வசதிக்காகவும் விவசாயத்தை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்ட அருவியாகும் அது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது என்பதை எடுத்து கூறினோம். அதன் பின்னர் அமைச்சர்கள் அனைவரும் தலைமை செயலாளர்களிடம் எடுத்துக் கூறி தற்காலிகமாக அந்த நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது

மீண்டும் தற்போது வனத்துறை பொது மக்களிடம் கெடுபிடி காண்பிக்க ஆரம்பித்துள்ளது இது சம்பந்தமாக விவசாய சங்க தலைவர் பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கி இருக்கிறார்.

பழைய குற்றால அருவியின் வரலாறு மத்திய வனத்துறை அருவியை கையகப் படுத்தினால் பொது மக்களுக்கும் விவசாயிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் மேலும் பழைய குற்றாலம் அருவியை மத்திய வனத்துறை கையகப்படுத்தும் பட்சத்தில் அதன் பின்னர் புலி அருவி மெயின் அருவி ஐந்தருவி என அனைத்து அருவிகளும் மத்திய அரசின் கட்டுப் பாட்டிற்கு சென்று விடும் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் பழத்தோட்ட அருவிக்கு இப்போது பொதுமக்கள் செல்ல முடியாத நிலை இருப்பது போல் குற்றாலம் சுற்றுலாத்தலம் என்கிற தன்மையை இழக்க நேரிடும். ஆகையால் வனத்துறை அமைச்சர் ஏற்கனவே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கிற அருவி அப்படியே பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் இயங்கிடவும் பொதுமக்கள் இரவு பகல் எந்நேரமும் குளிக்க தடை இருக்காத வகையிலும் செய்து தர கேட்டுக் கொள்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் நேரில் பழைய குற்றாலம் அருவியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். நிகழ்வின்போது மாவட்ட அவை தலைவர் சுந்தர மகாலிங்கம் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை முன்னாள் ஒன்றிய செயலாளர் காசி தர்மம் துரை மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ் வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்