தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம்.!

தென்காசி

தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம்.!

கீழப்புலியூரில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம்

தென்காசி மே 16

தமிழ்நாடு நாடார்  உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் கீழப்புலியூரில் தென்காசி மாவட்ட தலைவர்  ராஜ் நயினார் தலைமையில் பொருளாளர் சுப்பிரமணியன் மேற்கு மாவட்ட தலைவர் குருசாமி நாடார் ஆகியோர் முன்னிலையில் வீடுகள்தோரும் உறுப்பினர்கள் சேர்க்கை நடை பெற்றது இந்த உறுப்பினர்கள் சேர்க்கையை  மாநில தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தொடங்கி வைத்து பேசினார்.

அவர் பேசியதாவது :-

நம்முடைய இளைஞர்கள் இளம் பெண்கள் சமூக சமுதாய பணியாற்ற முன்வர வேண்டும் குறிப்பாக ஆண்களைப் போல படித்த பெண்களும் சமுதாய பணியாற்ற சமுதாய சங்கங்களில் தலைமை பண்பை ஏற்க முன்வர வேண்டும் பெண்கள் அரசியலில் ஆர்வம்  உள்ளதைபோல பெண்கள் சமுதாயத்திலும் ஆர்வம் உள்ளவர்களாக சமுதாய பணியாற்ற முன்வர வேண்டும்  

இதற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் மேலும் தென்காசியில் உள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இன்னும் சில வாரங்களில் குற்றாலம் சீசன் தொடங்க இருக்கிறது இதனால் இன்னும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்றும் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவிலுக்கு  வருகை தருகின்ற பக்தர்கள்  பணம் எடுப்பதற்கு ஏடிஎம் மையங்களை தேடி அலைகின்ற  நிலை உருவாகி இருக்கிறது.

இதனால் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவிலுக்கு முன்பு இரண்டு ஏடிஎம் மையங்கள் வைக்க வேண்டும் என்றும் தென்காசியில் கட்டப்பட்டு வரும் புதிய காய்கறி மார்க்கெட்டுக்கு தென்காசிக்கு பெருமை சேர்த்த மாமன்னர் பராக்கிரம பாண்டியன் பெயரை சூட்ட வேண்டும் என்றும் 5-5-2025  அன்று நம்முடைய தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு அனுப்பி உள்ளதாகவும் நம்முடைய கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்  நிறைவேற்றி தருவார்கள்  என்று நம்புவதாகவும் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கண்ணன் முருகன் நடராஜன் சாஸ்திரகனி கவிதா மாரியம்மாள் சேர்மகனி விஜயலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்