தென்காசியில் காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி 34 ஆவது நினைவு தினம்.!

தென்காசி

தென்காசியில் காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி 34 ஆவது நினைவு தினம்.!

தென்காசியில் காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி 34 ஆவது நினைவு தினம்

பழனி நாடார் எம்எல்ஏ பங்கேற்பு

தென்காசி மே 22

தென்காசி வடக்கு மாசி வீதியில் அமைந்துள்ள காந்தி சிலை முன்பு ராஜீவ் காந்தியின் 34 வது நினைவு தினம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அனுஷ்டிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும், தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான எஸ் பழனி நாடார் தலைமை வகித்து அலங்கரிக்கப்பட்ட ராஜீவ் காந்தியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந் நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் சட்டநாதன், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், மாவட்ட துணை தலைவர் சண்முகவேல், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஏஜிஎம்.கணேசன், சந்தோஷ், பொருளாளர் ஈஸ்வரன், வட்டாரத் தலைவர்கள் பெருமாள், கதிரவன், குமார் பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் எஸ் ஆர் சுப்பிரமணியன், மாநில பேச்சாளர் ஆய்க்குடி பெரியசாமி, செங்கை கண்ணன், ராஜீவ் காந்தி, பீர் முகமது, சித்திக், சேட் கவுன்சிலர்கள் ரபிக்,மேரிமாதவன், கனகஜோதி, தங்கராஜ், முருகன், செல்லப்பா, குற்றாலம் பேரூர் தலைவர் துரை, அமானுல்லா, நயினார்சாமி, 
சிங்க குட்டி என்ற குமரேசன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்