சுந்தரபாண்டியபுரம் அன்னை முதியோர் இல்லத்தில் விஜய் வசந்த் எம் பி பிறந்தநாள் நிகழ்ச்சி.!

தென்காசி

சுந்தரபாண்டியபுரம் அன்னை முதியோர் இல்லத்தில் விஜய் வசந்த் எம் பி பிறந்தநாள் நிகழ்ச்சி.!

சுந்தரபாண்டியபுரம் அன்னை முதியோர் இல்லத்தில் விஜய் வசந்த் எம் பி பிறந்தநாள் நிகழ்ச்சி

சுரண்டை சேர்மன் வள்ளி முருகன் பங்கேற்பு

தென்காசி மே 20

தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தக_பிரிவு மாநில தலைவரும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான  விஜய் வசந்த் எம்.பி யின்  பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் சார்பாக, மாவட்ட தலைவர் தாயார்தோப்பு எம்.எஸ்.இராமர் ஏற்பாட்டில், தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள அன்னை_முதியோர் இல்லத்தில் காலை_உணவு வழங்கப்பட்டது.

சுரண்டை நகர்மன்ற தலைவர் எஸ் பி என் வள்ளிமுருகன்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  காலை உணவினை வழங்கினார். 

இந் நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர் சுப்பிரமணியன் மாநில வர்த்தக காங்கிரஸ் துணைத் தலைவர் சுப்பிரமணியன், கீழப்பாவூர் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் குமார்பாண்டியன், சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், நகர்மன்ற உறுப்பினர்கள் தெய்வேந்திரன்,ரமேஷ், மாரிமுத்து, தங்கராஜ், சின்னராஜ், ஆலங்குளம் வட்டார வர்த்தக காங்கிரஸ் தலைவர் வீராணம் தர்மர், ஆலங்குளம் கார்த்திக், சுந்தர பாண்டிபுரம் காங்கிரஸ் நிர்வாகிகள் சுப்பையா, கணபதி தேவர்,கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில்  முப்புடாதி பாண்டியன்நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்