அரசு கலைக்கல்லூரியில் கூடுதல் வகுப்பறையை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.!
தென்காசி

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் கூடுதல் வகுப்பறையை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்
மாவட்ட ஆட்சியர், தென்காசி எம்எல்ஏ குத்துவிளக்கு ஏற்றினர்
தென்காசி மே 20
சென்னை ராணி மேரி கல்லூரியி லிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் ரூபாய் 3.97 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள 14 வகுப்பறைகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் டாக்டர் கே பி கணேசன், சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன், பொதுப்பணித்துறை திருநெல்வேலி உதவி பொறியாளர் சரத்குமார், உதவிமின் பொறியாளர் ரசீன் அகமது மற்றும் மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் ஆசிரியைகள் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்