கடையம் பகுதியில் கந்து வட்டிக் காரர்களை நிரந்தரமாக தடை செய்ய கோரி காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் மே 24 ல் ஆர்ப்பாட்டம்.!
தென்காசி

கடையம் பகுதியில் கந்து வட்டிக் காரர்களை நிரந்தரமாக தடை செய்ய கோரி காங்கிரஸ் மகளிர் அணி தலைவி சீதா லெட்சுமி தலைமையில்
மே 24 ல் ஆர்ப்பாட்டம்
தென்காசி மே 20
கடையம் பகுதியில் நடக்கும் கந்து வட்டி கொடுமைகளை தடுத்து கந்து வட்டிக்காரர்களை நிரந்தரமாக தடை செய்ய கோரி மே 24 ல் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி கடையம் காவல் ஆய்வாளருக்கு கடையம் வட்டார மகளிர் அணி தலைவி சீதாலட்சுமி மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது,
நான் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து வருகிறேன். கடந்த 20 ஆண்டுகளாக கடையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கட்சி பணி செய்து வருகிறேன்.
கடந்த ஆட்சிக்காலத்தில் மகளிர் சுய உதவி குழு என்ற பெயரில் கடையம் சுற்று வட்டார பகுதிகளில் கந்து வட்டிக்காரர்கள் ஆதிக்கம் அதிகரித்து கந்து வட்டிக் காரர்களின் கூடாரமாக இருந்து வந்தது. தோழமை கட்சிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தியதில் பல நாள் அதிகாரிகளின் துரித நடவடிக்கை களினால் கந்து வட்டிக்காரர்களின் நடவடிக்கை சற்று குறையப்பட்டு இருந்தது.
ஆனால் சமீப சில மாதங்களாக மீண்டும் கடையம் சுற்று வட்டார பகுதிகளில் கந்து வட்டிக்காரர்களின் கொடுமை தலை விரித்து ஆட தொடங்கியுள்ளது. எனவே தோழமைக் கட்சிகளின் ஆதரவன் எனது தலைமையில் வருகின்ற 24-ஆம் தேதி காலை 10 மணி அளவில் சின்ன தேர் திடலில் கடையம் பகுதியில் தலை விரித்தாடும் கந்து வட்டி கொடுமைகளையும் அதற்கு காரணமான கந்து வட்டி காரர்களையும் எதிர்த்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்கிட கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியாளர்
AGM கணேசன்