முதியோர் இல்லத்தில் உணவு சாப்பிட்ட 4 பேர் பலி. ! இல்லத்தை சீல் வைத்த அதிகாரிகள். !
தென்காசி

முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை- பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு
தென்காசி ஜுன் 13
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால்
4 பேர் உயிரிழப்பு.
முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக ஏற்கெனவே 3 பேர் உயிரிழந்தனர்.
முதியோர் இல்லத்தில் ஆய்வு செய்தபின் வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இல்லத்தில் அதிகாலை மதுரையை சார்ந்த தனலட்சுமி என்கின்ற மூதாட்டி பலியானார். இதனால் தற்போது
பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இதன் தொடர்பாக முதியோர் இல்லத்தின் நிர்வாகி ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார்.
செய்தியாளர்
AGM கணேசன்