பல்நோக்கு கட்டிடத்தை திறந்து வைத்து உணவு பொருட்களை வழங்கிய அதிமுக துணை பொதுச்செயலாளர்..!
கிருஷ்ணகிரி

வேப்பனஹள்ளி தொகுதியில் பல்நோக்கு கட்டிடத்தை திறந்து வைத்து உணவு பொருட்களை வழங்கிய அதிமுக துணை பொதுச்செயலாளர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி, சூளகிரி ஒன்றியம், புன்னாகரம் கிராமத்தில் அதிமுக கழக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கிழ் 9.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டி இருந்த நிலையில், கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு இன்று திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி.முனுசாமி ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடையில் வழங்கப்படும் உணவு பொருட்களை வழங்கினார்.
சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு என்கிற வெங்கடாசலம் ஏற்பாட்டில் புன்னாகரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன..
இந்நிகழ்ச்சியில் சூளகிரி மத்திய ஒன்றிய செயலாளர் மாதேஷ், ஒன்றிய பொருளாளர் நாராயணப்பா, மாவட்ட துணை செயலாளர் ராமன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுரேஷ், சார்பாக மாவட்ட நிர்வாகி கொண்டப்பா, மாவட்ட பிரதிநிதி நாகேஷ், பாசறை ஒன்றே செயலாளர் மஞ்சு மற்றும் ஊர் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் என கலந்து கொண்டனர்,.
செய்தியாளர்
மாருதி மனோ