அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்.!

வானிலை

அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்.!
வானிலை

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று (வெள்ளிக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இந்நிலையில் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் கிழக்கு-வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.

சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மெதுவாக கிழக்கு - வடகிழக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து பின்னர் கடலில் படிப்படியாக வலுவிழக்க வாய்ப்புள்ளது' எனக் கூறியுள்ளது வானிலை ஆய்வு மையம்.

முன்னதாக வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.