மேட்டுப்பாளையம் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த மூவரை கைது செய்த காவல்துறை.!
மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் நெல்லித்துறை ரோடு பகுதியை சேர்ந்த ஆஷிக் என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இன்று 27.12.24 தேதி அதிகாலை சுமார் 01.30 மணி அளவில் வாடகை நிமித்தமாக மேட்டுப்பாளையம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் போகும் சாலை சந்திப்பு அருகே ரயில் நிலையத்திலிருந்து வாடகைக்கு யாராவது வந்தால் ஏற்றி செல்லலாம் என்று ஆஷிக் ஆட்டோவுடன் நின்று கொண்டிருந்தார்.
ஏற்கனவே ஆட்டோ ஓட்டுநர் ஆஷிக்கிற்கு தெரிந்த நபர்களான வேடர் காலணியை சேர்ந்த லோகேஷ் 23, பாரதிநகர் அருண் 35, காரமடை ரோடு, எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் 44 ஆகியோர் ஆஷிக்கிடம் குடிப்பதற்கு பணம் கொடு என்று கேட்டுள்ளனர்.
https://www.newstodaytamil.com/Mettupalyam-bus-stand-near-protest-in-Tmmk-MMK
அதற்கு ஆஷிக் பணம் இல்லை என்று சொல்லவும் எதிரிகள் மூன்று பேரும் கத்தியை காட்டி மிரட்டியதால் ஆஷிக் தனது பாக்கெட்டில் இருந்த Vivo ஆண்ட்ராய்டு செல்போனை எடுத்துக் கொடுத்து விட்டதாகவும் இன்று 27.12.2024 ஆம் தேதி மேட்டுப்பாளையம் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.
பின்னர் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்னகாமனன் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து மூன்று நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )