அண்ணாமலை சாட்டையடி சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் என்ன நடந்தது தெரியுமா.!
அரசியல்
தமிழகத்தில் ஆளும் தி மு க அரசை கண்டித்து அண்ணாமலை சாட்டையால் அடித்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் உடலை வருத்தி வேண்டுதல் நிறைவேற்றினால் நினைத்த காரியம் நடக்கும் எனவும் தி மு க அரசை வீட்டிற்கு அனுப்ப அடுத்து 48 நாட்கள் அருபடை முருகன் கோவில்களுக்கு காலில் செருப்பு அணியாமல் நடந்து செல்வதாகவும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அதில் சிலர் ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அண்ணாமலை ஆதரவாளர்கள் சிலர் அவர்கள் வீட்டின் முன் சாட்டையாலும், கயிறு போன்ற பொருட்களாலும் தங்களை அடித்து வீடியோ வெளியிட்டனர்.
சிலர் அண்ணாமலையை கிண்டலடிக்கும் விதமாக படத்தின் வீடியோக்கள், மற்றும் தாங்களே க்ரியேட் செய்த வீடியோக்களை பகிர்ந்து பேசும் பொருளாக்கினர்..
எது எப்படியோ அண்ணாமலையின் சாட்டையடி சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.