பாபர் மசூதி இடிப்பு நாளை கண்டித்து எஸ் டி பி ஐ ஆர்ப்பாட்டம். !
மாவட்டம்

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் S D P I கட்சி சார்பாக டிச 6 கண்டித்து ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடிப்பு தினத்தை பாசிச எதிர்ப்பு தினமாக SDPI கட்சி தேசம் எங்கும் கடைப்பிடித்து வருகிறது
அதன் தொடர்ச்சியாக கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரம் சார்பில் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் நகர தலைவர் F. முஹம்மது அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் F. முஹம்மது அப்பாஸ் வரவேற்புரை ஆற்றியும் மாவட்ட தலைவர் K. முஹம்மது நௌஃபல் தலைமை உரையாற்றியும் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தனர்.
காரமடை நகரத் தலைவர் J. நிசார்தின், சையது அபுதாஹிர் AH ஆகியோர் கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.
SDTU தொழிற்சங்க மாவட்ட தலைவர் A. அசனார், மாவட்டச் செயலாளர் J. சாதிக் பாஷா, பொறியாளர் அணியின் மாநில இணைச் செயலாளர் Er.M. முஹம்மது அல்தாப், வர்த்தகர் அணியின் மாவட்ட தலைவர் J. சாதிக் பாஷா , விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் A. ஏ.ராபியா, ஐக்கிய ஜமாத் பேரவையின் செயலாளர் அக்பர் அலி, மேட்டுப்பாளையம் நகர இணை செயலாளர் S. அஷ்ரப் அலி, மேட்டுப்பாளையம் நகர பொருளாளர் A. காதர் பாட்ஷா, காரமடை நகரச் செயலாளர் சதாம் உசேன் ஆகியோர் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை வகித்தனர்.
ஆதித்தமிழர் பேரவையின் மாநில அமைப்பு செயலாளர் அ. சபாபதி , மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாத் பேரவையின் தலைவர் ஹாஜி. A.J. முஹம்மது ஷெரிஃப், SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் M.E. அப்துல் ஹக்கீம் , SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் T. ரத்தினம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையை நிகழ்த்தினர்.
அதனை தொடர்ந்து S. அப்துல் காதர் கண்டன முழக்கங்களை முழங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக மேட்டுப்பாளையம் நகரச் செயலாளர் A. அன்சர் அலி நன்றியுரை கூறி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )