மேட்டுப்பாளையம் 6 ஆவது வார்டில் 3 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா.!

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் 6 ஆவது வார்டில் 3 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா.!

மேட்டுப்பாளையம் நகராட்சி மனிதநேய மக்கள் கட்சியின் 6 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அ.ஸமீனா பேகம் அப்துல் ஹக்கீம் அவர்கள் தலைமையில் 3 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

சமத்துவ பொங்கல் விழா மற்றும் சிறுவர் , சிறுமியர் மற்றும் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை மேட்டுப்பாளையம் நகராட்சி நகர் மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி,
நகர்மன்ற துணைத் தலைவர் அருள்வடிவு முனுசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர் .

இந்நிகழ்ச்சியில் சிறுவர் ,  சிறுமிகள் , பெரியவர்கள் , வார்டு பொதுமக்கள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் முஹம்மது சேட் , அன்னூர் சாகுல் ஹமீது , பக்கீர் முகமது சேட் , அப்துல் காதர் ஜெய்லானி , ஜாபர் சாதிக் , முகம்மது ஜுபைர் , இமாம் கஜாலி , முகமது சல்தீன் , ஷேக் மைதீன் , முகமது தவ்ஃபீக் ,  உமர் முக்தார் , காரமடை சிக்கந்தர் , தாயனூர் சித்திக் , பாசில் , ஆசிக் , வார்டு பொறுப்பாளர்கள் வாசிம் , ஆசிக்  என பலரும் கலந்து கொண்டனர் . 

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )