மேட்டுப்பாளையத்தில் இரு சக்கர வாகனத்தை திருடி சென்ற நபர் கைது.!
குற்றம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கிருஷ்ணசாமி லைனில் குடியிருந்து வரும் வஞ்ஜனன் என்பவர் Power Tech கம்பெனியில் சிசிடிவி டெக்னீசியனாக வேலை செய்து வருகிறார்.
இவர் வேலை செய்யும் கம்பெனி உரிமையாளர் பிரசாந்த் என்பவரது வேலை விஷயமாக சென்று வர TN 38 R 9887 என்ற எண் கொண்ட YAMAHA RX 135 இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தி வந்ததாகவும் நேற்று 22.12.2024 ஆம் தேதி மதியம் சுமார் 2:30 மணி அளவில் வாகனத்தை கம்பெனியின் கீழ் தளத்தில் நிறுத்திவிட்டு வேலை முடித்து 02:50 மணிக்கு வந்து பார்த்தபோது வண்டியை காணவில்லை.
பின்னர் அக்கம்பக்கம் தேடி எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில் இன்று 23.10.2024 ஆம் தேதி காலை சுமார் 9 மணி அளவில் மேட்டுப்பாளையம் இடையர்பாளையம் டாஸ்மாக் கடை அருகே தனது வாகனத்துடன் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்துள்ளார்.
விசாரித்த போது மேட்டுப்பாளையம் கருப்பராயன் குட்டை பகுதியை சேர்ந்த சந்துரு 22 என்றும் வண்டியை திருடி சென்றதும் தெரியவந்தது.
பின்னர் மேட்டுப்பாளையம் காவல் நிலையம் சென்று நடந்ததை கூறி அந்த நபரை ஒப்படைத்துள்ளார் வஞ்சனன்.
வஞ்சனன் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்னக்காமனன் தலைமையிலான போலீசார் சந்துரு மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi (MR)