தாய்ப்பால் குடிக்கும் போது குழந்தை மூச்சுத் திணறி உயிரிழப்பு.!
சென்னை

நன்மங்கலத்தில் பிறந்து 23 நாட்களே ஆன பெண் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சுத் திணறி உயிரிழப்பு.
சென்னை மேடவாக்கம் அடுத்த நன்மங்கலம், ஏழுமலை சாலையை சேர்ந்த ராம்ஜு ஹரி பிரியா தம்பதியின் பிறந்த 23 நாட்கள் ஆன பெண் குழந்தை, இன்னும் பெயர் கூட வைக்கப்படவில்லை, ராம்ஜி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார்,
இரண்டாவது குழந்தை பிறந்து 23 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இன்று அதிகாலை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது மூச்சுத் திணறி குழந்தையின் மூக்கிலிருந்து ரத்தம் வந்துள்ளது, அதிர்ச்சியடைந்த தாய் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்த போது குழந்தை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில், கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக மேடவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிறந்து 23 நாட்களே ஆன் பெண் குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.