ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீநடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்.!

ஆண்மீகம்

வேலூர் மாவட்டம் மாசி சுக்ல பட்ச சதுர்த்தியை முன்னிட்டு வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீநடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் திரளான பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்தனர்.

வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று மாசிமாத சுக்ல பட்ச சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீநடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு பழங்கள்,தேன், ,அரிசி மாவு,பால்,தயிர்,கரும்பு சாறு ,சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்துசிறப்பு யாகமும் நடந்தது.

பின்னர் மலர் மாலைகள், வில்வ மாலைகளால் சிறப்பு அலங்காரங்கள், மகா தீபாராதனைகள் நடந்தது.

இதில்  ஆலய செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்தனர்.

செய்தியாளர்

ஆர்.ஜே.சுரேஷ்