உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம். !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி பர்கூர் பேரூரில் உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி போதை ஒழிப்பை மக்கள் இயக்கமாக முன்னெடுப்போம். நம் குழந்தைகளை காக்க அரசியல் எல்லைகள் கடந்து ஒன்றிணைவோம் ! போதை ஒழியட்டும் ! பாதை ஒளிரட்டும்!! என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA கலந்து கொண்டார்.
இந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி அரசு உதவி பெறும் பள்ளியான கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி முதல் பர்கூர் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.
இதில் பர்கூர் அரசு ஆண்களின் மேல்நிலைப்பள்ளி, பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் கன்கார்டியா பள்ளியை சார்ந்த 1200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள். இந்த போதை ஒழிப்பு பேரணி நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் கண்கவர் நடன நிகழ்சிகள் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மற்றும் பர்கூர் பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ