கலைஞரின் திரு உருவப் படத்திற்கு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட கிராம மக்கள் மலர்மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை.!

கிருஷ்ணகிரி

கலைஞரின் திரு உருவப் படத்திற்கு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட கிராம மக்கள் மலர்மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞரின் பிறந்த நாளை கிராமங்கள் தோறும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என தமிழக முதல்வரின் உத்தரவின்படி பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் கலைஞரின் திரு உருவப் படத்திற்கு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட கிராம மக்கள் மலர்மாலை அணிவித்து மலர் தூவி கொண்டாடப்பட்டது.

கலைஞரின் 102வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் மட்டுமின்றி கிராமங்கள் தோறும் பட்டிதொட்டி எங்கும் கழக உடன்பிறப்புகள் உற்சாகமாக கொண்டாடுமாறு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிக்கையிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி ஒன்றியம், பெத்ததாளப்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அம்சவள்ளி வெங்கடேசன் தலைமையில் கலைஞரின் 102-வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது,

பெத்ததாளப்பள்ளி, கிராமத்தில் நடைபெற்ற கலைஞரின் பிறந்தநாள் விழாவின் போது வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திரு. உருப்படத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அம்சவள்ளி வெங்கடேசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கழக நிர்வாகிகள் முன்னிலையில் கேக் வெட்டி உற்சாகமாக கலைஞரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

பின்னர் கலைஞரின் பிறந்த நாளுக்கு வருகை தந்த அனைவருக்கும் இனிப்பு மற்றும் கேக் வழங்கி கலைஞரின் நூற்றாண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது கொண்டாடப்பட்டது.

மேலு இந்த விழாவின்போது திமுக கழக நிர்வாகிகள் மட்டுமின்றி ஏராளமான கிராம மக்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதே போல மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கலைஞரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

செய்தியாளர்

மாருதி மனோ