மேலகரம் பேரூர் திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் நிகழ்ச்சி..!

தென்காசி

மேலகரம் பேரூர் திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் நிகழ்ச்சி..!

மேலகரம் பேரூர் திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் நிகழ்ச்சி

மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் பங்கேற்பு

தென்காசி ஜூன் 3

தென்காசி மாவட்டம், மேலகரம் பேரூர் திமுக சார்பில் மேலகரம் பேரூந்து நிறுத்தம் அருகில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102வது பிறந்தநாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

இந் நிகழ்ச்சிக்கு  மேலகரம் பேரூர் திமுக செயலாளர் சுடலை தலைமை வகித்தார்.பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜீவானந்தம், மன்ற உறுப்பினர்கள் கபிலன், சிங்கத்துரை, பொருளாளர் ரமேஷ் குமார், ஒன்றிய பிரதிநிதிகள் யாகவா சுந்தர், நன்னை பாலசுப்பிரமணியன், பூபதி, வழக்கறிஞர் வேலுச்சாமி, மாவட்ட  பிரதிநிதி சுந்தரம் என்ற சேகர், அவைத் தலைவர் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலகரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீரபாண்டியன் வரவேற்புரை ஆற்றினார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.

இந் நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் கென்னடி, பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ்வரன், வீரபாண்டியன், காசி விஸ்வநாதன்,  குருசாமி, குத்தாலிங்கம், ஈஸ்வரன் என்ற மணி, ஆவின் முருகன், கணேசன், பகவதி ராஜ், ஆயிரப்பேரி முத்துவேல், கபீர், ஷரீஃப், குமாரவேல், மேலகரம் முருகன், ஆறுமுகசாமி, விக்னேஷ், நன்னை மாரி, பார்த்திபன், ஆத்தி, அருண், கனி, சுப்பிரமணியன், குற்றாலம்  கொக்கி குமார், சந்திரன், மனோகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன் 

விளம்பர தொடர்புக்கு